மீன் விழிகள்......
கணணி வலைக்குள்
மாட்டிக்கொண்டு
விழித்திருந்த கண்
விழிகள்... குழிகளாக..
விழி.. வெளிகளை
சுற்றியது.... கரு
வளையங்கள்!
விழிகளின் நிலையை
நிலைக் கண்ணாடி
காட்டிய போது.. மூடி
கொண்ட கரு விழிகள்
மூக்கு கண்ணாடிக்குள்
மாட்டிக்கொண்டது!
மீன் விழிகளே!
ஜாக்கிரதை....
ஏழு கடல்களும்
கணணி வலைக்குள்
அடக்கம்!
No comments:
Post a Comment