பள்ளிக்கூடம் விட்டு
விடா மழையில் நனைந்து
புத்தகங்கள் குளிக்க...
பாதணியும் சறுக்க
ஆடிப்பாடி நடந்து
தலை முடியில் சிந்தும்
நீரை .........
தடவிப் பார்த்து மகிழ்ந்து
என் பாதணிகள் தெறிக்கும்
சேற்று நீருக்கு பயந்து
வெள்ளை நிற சீருடையை
மெல்ல கையால் பிடித்து
நடந்து வரும் போதினிலே!
அந்த பூவரச மரத்தடியில்
நிமிடங்கள் சில நின்று
இலை கழுவும் மழைத்துளியை
ஒரு துளியாய்.. சில துளியாய்
உள்ளங்கையில் ஏந்தி...
அதி வேக காற்றடிக்க கிளைகள்
ஆடும் போது இலைகள் சிந்தும்
பல துளிகளுக்கு மனம் உடனே
ஏங்கி
தொடரும் மழை பயணத்தில்!
வயல் வெளியின் வெள்ளத்தில்
கால் நனைக்க விரும்பி பின்
விரும்பாமல் மனம் திரும்பி
கையை நீரில் அலம்பி!
தோழமையின் விருப்பத்தில்
மெல்ல மனம் இரங்கி
வெள்ளத்தில் இறங்கி
நனையாமல் நனைந்து
ஓடிவரும் வெள்ளத்தில்
மிதந்தோடி வரும் சருகுகளை
இரு கைகளினால் அள்ளி!
இல்லை என்று தெரிந்தாலும்
வயலில் மீனை தேடினோம்
காகிதக் கப்பல் செய்து ஆசைகளை
ஏற்றினோம்!
முன் சென்ற கப்பலுக்கு பின்
மிதந்து சென்ற என் ஒற்றை
பாதணியை .......
பார்த்து நான் கண் கலங்கி....
வெள்ளத்தில் நடப்பதற்கு உள்ளம்
மிக நடுங்கி பின் தொடர முடியாமல்
மழைத்துளியோடு சிந்திய என்
விழித்துளியும் சேர்ந்து.....
வயல் மண்ணோடு கலந்து
தமிழ் வாசம் வீசும் என் கிராமத்து
மண் வாசனையை என்னாலும்
என் சக தோழமையாலும்
சுவாசிக்க முடியவில்லை இன்று!
எதிர் காலங்கள் காத்திருப்பா
கைக்குட்டையா தெரியவில்லை....
ஆனாலும்......
புரியவதில்லை என்றும்.....
விஷ வாயுவை நம் மண்ணுக்குள்
கலந்தவர் தான் யாரோ
கலப்பவர் தான் ஏனோ:-(
Friday, September 3, 2010
கண்ணுக்குள் நீ.....
குடகு மலையில் தவறி....
ஒஹெனக்கல்லில் ஓடி வந்து..
காவிரி ஆற்றில் விழுந்த உன்னை...
மலைகள்... ஏழு... கடல்கள் தாண்டி..
ஆழம் காணாத நயாகராவில் எட்டி
பார்த்து கண்டு பிடித்தேன்!
என் கண்ணுக்குள் நீயிருந்தாய்!
....காதல் கைதி.....
சின்ன பெண் உன்னை...
என் கண் என்னும் காப்பகத்தில்
வைத்து நான் காத்திருக்க!....
...காயங்கள் இல்லாமல் ரெத்தம்
நீ சிந்தி....
காரணம் நான் என்று அன்பினால்
கைது செய்து....
விடுதலைக்கு விண்ணப்பம்
காதலில் இல்லை என்று....
உன் இதயம் என்ற பெருஞ்
சிறையில்... நீ என்னை....
ஆயுள் சிறை வைத்தாய்!
மௌன வார்த்தை.....
நேரில் உன்னை பார்க்கும் போது
இதயம் இடம் மாற .....
உன் விழியில் என்னை பார்க்கும் போது
நிலை தடுமாற....
மூச்சு காற்று தூண்டும் போது....
தீ மேல் தீயாக ......
உன் விரல்கள் என்னை தீண்டும் போது
வியர்வை மழையாக.....
நான்கு இதழ்கள் சேர்ந்து பேசும் போது
மௌனம் மொழியாக....
நான் வார்த்தைகளை கோர்த்து பார்த்தேன்
அர்த்தம் பலதாக!
காதல் கனி!!!!!!
இதயம் உன்னை தேடி
துடித்து களைத்து இழைத்து
இளமை இழந்து...
...முதுமையின் இணைப்பில்
தனிமையில் நானிருந்து
நினைக்க நினைக்க....
கண்ணீரில் கரைந்து
இனிக்கிறது இப்போது.....
இளமையின் அணைப்பில்
தனிமையில் நீ கொடுத்த
காதல் கனி!
........இதழ்.......
நீ! புத்தகம் விரித்து
பத்திரமாய் இதழ்
அசைத்து....
உச்சரிக்கும்.. போது
வந்து விழும்....
வார்த்தை எல்லாம்
என் பெயர்
தான் ஆகியதா!
பத்திரமாய் இதழ்
அசைத்து....
உச்சரிக்கும்.. போது
வந்து விழும்....
வார்த்தை எல்லாம்
என் பெயர்
தான் ஆகியதா!
மீன் விழிகள்......
கணணி வலைக்குள்
மாட்டிக்கொண்டு
விழித்திருந்த கண்
விழிகள்... குழிகளாக..
விழி.. வெளிகளை
சுற்றியது.... கரு
வளையங்கள்!
விழிகளின் நிலையை
நிலைக் கண்ணாடி
காட்டிய போது.. மூடி
கொண்ட கரு விழிகள்
மூக்கு கண்ணாடிக்குள்
மாட்டிக்கொண்டது!
மீன் விழிகளே!
ஜாக்கிரதை....
ஏழு கடல்களும்
கணணி வலைக்குள்
அடக்கம்!
Subscribe to:
Posts (Atom)






