பூவாய் பூவையென்
பூமனம்...
பூவிதழில் வழிவது
உயித்துளி!
முள்ளும் இவளின்
ஓர் மனம்... உன்
நினைவால் வலிக்கும்
மனவலி!
இலையின் நரம்புகள்
முழுவதும்
என் நரம்பாய் ஓடுது
உன்னிடம்!
பூந்தாளாய் நீள்வது
என் கரம்....
உன்கரம் பூவை
பெற்றிடவே!

No comments:
Post a Comment