Friday, September 3, 2010

காதல் சாவி?....


வண்ணத்துப் பூச்சிக்கு
விண்ணப்பம் போட்டு
இறக்கைகள் கோடி
வாங்கி வந்து....
நெஞ்சுக்குள் யாவையும்
கொட்டி வைத்து....

உயிரில்
இன்பப்பாரத்தை
சுமந்தபடி....
ஆசைத் தேரினில்
நான் அமர்ந்து...

இளமை வானிலே
பறந்து வந்து.....
காதல் தேசத்தின்
கனவுப் பயணத்தை
என் காதலி காதினில்
எடுத்துரைத்தேன்...

தன் காதல் கதவுக்கு
சாவி தொலைந்ததாய்...
என் காதினில் காதலி
கதை முடித்தாள்!

No comments:

Post a Comment