இதயத்தை திறந்தேன்
இருக்கை போட்டு கொண்டாய் !!
வலக்கை நீட்டி ,இடக்கை அணைத்து
வாழ்க்கை இதுவென்றாய்!!
துயில் கொள்ளும் என் விடிகாலை
விழித்தெழட்டும்! உன் காலடி ஓசை கேட்டு!
மடிசாயும் நொடிப்பொழுதுக்கு
ஆயுளையும் அடகு வைப்பேன் !
அன்புக்கு இணையாக
உயிர் போதுமா உனக்கு?
ஏழு சனனமும் வேண்டுமடி எனக்கு !
குயில் இனமடி நீ !
கூடு கட்டிக்கொள் !!
தந்து விடுகிறேன் என்னை மரமாக !
பிரிவென்றால் உன் ஆன்மாவோடு இணைவேன் !
தந்துவிடு ! மரணத்தை பரிசாக !!
உன் தலைமுடி சிந்திய ஒற்றைப்பூ !
போதும் என் கல்லறைக்கு !!
பிரம்மாவே!
படைக்கும் பிதாவே !
சாகா வரம் என் காதலிக்கு !!
மரணம் பயம் இல்லை
எனக்கு !

No comments:
Post a Comment