என்னை.....
நினைக்காதே மறந்து
விடுவாய்
தொடராதே நிழலாகி
விடுவாய்
தீண்டாதே கை விட்டு
விடுவாய்
கை பிடிக்காதே கைத்தடி
ஆகிவிடுவாய்
மடி சாயாதே சேயாகி
விடுவாய்
தோள் சாயாதே பொதியாகி
விடுவாய்............!
என் இதயத்தை மெதுவாய்
தொட்டுவிடு
என்னுயிராகி
.................விடுவாய் நீ!
நிரந்தரி கதிர்!
No comments:
Post a Comment