உன் ஆயுளின் எல்லைக்கோட்டை
என் உள்ளங்கையில் கீறி
உன் உள்ளங்கையில் கொடுத்தான்
பிரம்மன்!
கையை பற்றிக்கொண்டே உயிருக்கு
தீயை பற்ற வைக்கிறாய் உன் வாயில்!
என் மனதை புகைய வைத்து!
உன் ஆயுள் கோட்டை முழுதாய் அழித்து
என் வாழ்க்கைப் பாதையை அணைக்கிறாய்
பாதியில் தீயால்!
நம் ஆசைகளை விறகாக்கி!
No comments:
Post a Comment