உனக்காக
காத்திருக்கும் தருணங்களில்
நொடிப்பொழுதும் நிமிடமாகி
மணிக்கணக்கும் மறந்து போக
உன்னோடு நான் பேசிக்கொண்டே
உன்னை எதிர்பார்த்திருப்பேன்.....
தொலைவில் வரும் உன்னைத்தொட்டு
ஓடிவரும்... முகில்தொடரும்
நிழல்கூட......
என்னைத் தொட்டு தாண்டும் போது
என் விழியில் விட்டுச்செல்லும்
உன் நிழலை! என்னுயிரே நீயென்று!

No comments:
Post a Comment