Friday, September 3, 2010

மௌன வார்த்தை.....


நேரில் உன்னை பார்க்கும் போது
இதயம் இடம் மாற .....
உன் விழியில் என்னை பார்க்கும் போது
நிலை தடுமாற....
மூச்சு காற்று தூண்டும் போது....
தீ மேல் தீயாக ......

உன் விரல்கள் என்னை தீண்டும் போது
வியர்வை மழையாக.....

நான்கு இதழ்கள் சேர்ந்து பேசும் போது
மௌனம் மொழியாக....
நான் வார்த்தைகளை கோர்த்து பார்த்தேன்
அர்த்தம் பலதாக!

No comments:

Post a Comment