பள்ளிக்கூடம் விட்டு
விடா மழையில் நனைந்து
புத்தகங்கள் குளிக்க...
பாதணியும் சறுக்க
ஆடிப்பாடி நடந்து
தலை முடியில் சிந்தும்
நீரை .........
தடவிப் பார்த்து மகிழ்ந்து
என் பாதணிகள் தெறிக்கும்
சேற்று நீருக்கு பயந்து
வெள்ளை நிற சீருடையை
மெல்ல கையால் பிடித்து
நடந்து வரும் போதினிலே!
அந்த பூவரச மரத்தடியில்
நிமிடங்கள் சில நின்று
இலை கழுவும் மழைத்துளியை
ஒரு துளியாய்.. சில துளியாய்
உள்ளங்கையில் ஏந்தி...
அதி வேக காற்றடிக்க கிளைகள்
ஆடும் போது இலைகள் சிந்தும்
பல துளிகளுக்கு மனம் உடனே
ஏங்கி
தொடரும் மழை பயணத்தில்!
வயல் வெளியின் வெள்ளத்தில்
கால் நனைக்க விரும்பி பின்
விரும்பாமல் மனம் திரும்பி
கையை நீரில் அலம்பி!
தோழமையின் விருப்பத்தில்
மெல்ல மனம் இரங்கி
வெள்ளத்தில் இறங்கி
நனையாமல் நனைந்து
ஓடிவரும் வெள்ளத்தில்
மிதந்தோடி வரும் சருகுகளை
இரு கைகளினால் அள்ளி!
இல்லை என்று தெரிந்தாலும்
வயலில் மீனை தேடினோம்
காகிதக் கப்பல் செய்து ஆசைகளை
ஏற்றினோம்!
முன் சென்ற கப்பலுக்கு பின்
மிதந்து சென்ற என் ஒற்றை
பாதணியை .......
பார்த்து நான் கண் கலங்கி....
வெள்ளத்தில் நடப்பதற்கு உள்ளம்
மிக நடுங்கி பின் தொடர முடியாமல்
மழைத்துளியோடு சிந்திய என்
விழித்துளியும் சேர்ந்து.....
வயல் மண்ணோடு கலந்து
தமிழ் வாசம் வீசும் என் கிராமத்து
மண் வாசனையை என்னாலும்
என் சக தோழமையாலும்
சுவாசிக்க முடியவில்லை இன்று!
எதிர் காலங்கள் காத்திருப்பா
கைக்குட்டையா தெரியவில்லை....
ஆனாலும்......
புரியவதில்லை என்றும்.....
விஷ வாயுவை நம் மண்ணுக்குள்
கலந்தவர் தான் யாரோ
கலப்பவர் தான் ஏனோ:-(

மண் மணம் வீசும் கவிதை..
ReplyDeleteஇளம் பிராய நினைவுகளை
பசுமை மனத்தோடு விதைத்துள்ளீர்கள்..!