உன் கால் தடம்
பார்த்து நடந்த
போது.......
என் உள்ளங்கால்கள்
ஒற்றிக்கொண்ட
உன் திருவடி பதிந்த
குருமணல் துகள்களில்
பாதியை......
திருநீறாக
என் நெற்றியில்
இட்டுக்கொண்டு......
துடைத்துக்கொள்ளாமல்
வைத்துக்கொண்டேன்
மீதியை......
என் உடலோடு நீறாக!

No comments:
Post a Comment