Friday, September 3, 2010

காதல்வரம்.....

கவிச் சிந்தனை
தான் எனக்கு!
காதல் சிந்தனை
உன்னை பார்த்து!

மண் குதிரை
பிடிக்கும் சிறு
வயதில்!
அதுவே எனக்கு
வாழ்க்கை என்றால்!

தாகம் தான்
எனக்கு....
கானல் நீர் தானா
அதற்கு!

சாகாவரம்
பெற்றதாம்
காதல்....
சாகும் வரமா
எனக்கு காதல்!

துடிக்கிறது இதயம்
உயிர்களுக்கு!
எனக்கு மட்டும்
வலிக்கிறது ஏனோ!

வலி தான் உன்
வரம் என்றால்
கண்ணே........
மீள வழி தேடாமல்
சாகிறேன்..
உனக்காக......என்
காதல் பெண்ணே!

No comments:

Post a Comment