உன்னோடு பேசும் நேரங்களில்
வெள்ளம் வந்து என் உள்ளம் நிறைக்கும்
உன் அன்பு மனதின் மடை திறந்து!
உன் தோளோடு சாயும் நேரங்களில்
விழிகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும்
என் மனதின் அணை உடைந்து!
உன் மார்போடு தூங்கும் நேரங்களில்
என் கண்ணீரில் வெல்லம் கலந்திருக்கும்
நீயும் நானும் கலந்திருந்து !
நிரந்தரி கதிர்!

No comments:
Post a Comment